"உதவுங்கள், இல்லை என்னை கருணை கொலை செய்யுங்கள்"

கோவை, நவம்பர் 13

விபத்தில் பாதிக்கபட்டு வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளதால் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய கோரி சோமனூரை சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவையை அடுத்து சோமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(51). தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு விபத்து ஏற்பட்டதில் முதுகுதண்டு பாதிக்கபட்டு இடுப்பிற்கு கீழ் செயல்படாமல் அவதிபட்டு வந்துள்ளார். இவருக்கு குழந்தை தெரேசா என்ற மனைவியும் ஆணிஸ் வெனிட்டா(18) கல்லூரியில் பயிலும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி குழந்தை தெரேசாவிற்கும் ஒரு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இவர்கள் இருவரையும் கவனிக்க வேண்டிய நிலையில் ஆணிஸ் வெனிட்டா கல்லூரி படிப்பை தொடர முடியாமலும் தங்களை கவனித்து கொள்ள வேண்டி இருப்பதால் வேலைக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளதாக கூறினார்.

மேலும், வருமானமின்றி சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒரு வேளை உணவளித்து வருகின்றனர் எனவும் மாதம் 2000 மருத்துவ செலவு ஆவதால் தங்களால் அதை கூட செலவு செய்ய முடியாத நிலை உள்ளதாக வர்கீஸ் தெரிவித்தார். இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கபட்டு உள்ளதாக கூறியவர் மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் உதவி கோரி மனு அளித்து 3 வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியவர் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிடகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...